×

படப்பிடிப்பிற்காக செர்பியா செல்ல இருந்த நிலையில் மக்களவை தேர்தல் முடியும் வரை வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்தார் கமல்ஹாசன்..!!

சென்னை: படப்பிடிப்பிற்காக செர்பியா செல்ல இருந்த நிலையில் மக்களவை தேர்தல் முடியும் வரை வெளிநாட்டு பயணத்தை நடிகர் கமல்ஹாசன் ரத்து செய்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 234-வது திரைப்படத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக செர்பியா சென்று அங்கு இரு வாரங்கள் தங்கி படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு செர்பியாவிற்கு மணிரத்தினம் படக்குழு சென்றுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்தான இறுதி செய்யப்படாமல் உள்ளது.

அதை இறுதி செய்வதற்காகவும், நாடாளுமன்ற தேர்தலை தீவிரப்படுத்துவதற்காகவும், மக்கள் நீதி மையம் சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது, தேர்தலுக்கான பணிகளை கட்டமைப்பது என தொடர்ந்து அப்பணிகளை மேற்கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசன் செர்பியா பயணத்தை தற்போது ரத்து செய்துள்ளார். தேர்தல் தொடங்கி வாக்குப்பதிவு நாள் வரை செர்பியா உட்பட அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நாள் வரை எந்த ஒரு வெளி நிகழச்சிக்கும் செல்லாமல் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் கவனம் சேர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.

The post படப்பிடிப்பிற்காக செர்பியா செல்ல இருந்த நிலையில் மக்களவை தேர்தல் முடியும் வரை வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்தார் கமல்ஹாசன்..!! appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Lok Sabha elections ,Serbia ,Chennai ,Mani Ratnam ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு