×

டூவீலர்கள் மோதி போலீஸ்காரர் படுகாயம்

அருப்புக்கோட்டை, மார்ச் 7: விருதுநகர் ஆயுதப்படையில் 2ம் நிலை காவலராக பணி புரிந்து வருபவர் கருப்பசாமி (29). இவர் அருப்புக்கோட்டை அருகே குலசேகரநல்லூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். இரவு 11.45 மணியளவில் டூவீலரில் விருதுநகருக்கு வந்துகொண்டிருந்தார். அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் சென்றபோது, எதிரில் விருதுநகரில் இருந்து வெம்பக்கோட்டையை சேர்ந்த காளிமுத்து (24) என்பவர் ஓட்டி வந்த டூவீலர், கருப்பசாமியின் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கருப்பசாமி, காளிமுத்து மற்றும் காளிமுத்துவின் டூவீலரில் வந்த பாண்டி(18) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கருப்பசாமியை அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதி போலீஸ்காரர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,Karuppasamy ,Virudhunagar Armed Forces ,Kulasekaranallur ,Arupkkottai ,Virudhu Nagar ,Dinakaran ,
× RELATED மனைவியை கொன்று கணவர் தற்கொலை