×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தர்மபுரி, மார்ச் 7: தர்மபுரி மதுவிலக்கு போலீஸ் எஸ்ஐ வெங்கடேஷ்குமார் மற்றும் போலீசார், அதியமான்கோட்டை தோக்கம்பட்டி முனியப்பன் கோயில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த திலீப்குமார் (28) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Prohibition Police ,SI ,Venkatesh Kumar ,Thokambatti Muniappan Temple ,Athiyamankot ,Bihar ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி