×

துபாயில் இந்தியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்: இந்திய தூதரகம் அறிவிப்பு

துபாய்: ஐக்கிய அரபு அமீரகததில் பணி புரியும் இந்திய தொழிலாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 65 சதவீதம் பேர் உடல் உழைப்பை அடிப்படையாக கொண்டு, வேலை செய்யும் நேரம் அல்லது வேலையின் அடிப்படையில் ஊதியம் பெறும் ப்ளூ காலர் தொழிலாளர்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2022ம் ஆண்டில், 1,000 ப்ளூ காலர் தொழிலாளர்கள் இயற்கை மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் ஐக்கிய அமீரக அரசு, இந்திய தொழிலாளர்களுக்காக எல்பிபி என்ற புதிய உயிர் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

The post துபாயில் இந்தியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்: இந்திய தூதரகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Indian Embassy ,Dubai ,UAE ,Indians ,United Arab Emirates ,Indian ,Embassy ,Dinakaran ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...