×

பாலஸ்தீனியர்கள் பலி 30 ஆயிரத்தை கடந்தது

ரபா: இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையானது 30ஆயிரத்தை கடந்துள்ளதாக காசா சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நடந்து வருகின்றது. இதில் இஸ்ரேல் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலியாகி வருகின்றனர்.

நேற்று 86 சடலங்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு எடுத்து வரப்பட்டது. மேலும் 113 பேர் காயமடைந்து சிகிச்சைக்கு வந்திருந்தனர். இஸ்ரேல் -ஹமாஸ் போரில் பலியானவர்களின் எண்ணிக்கையானது 30,717 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பெண்கள் மற்றும் சிறுவர்கள். மேலும் சுமார் 72000 பேர் காயமடைந்துள்ளனர்.

The post பாலஸ்தீனியர்கள் பலி 30 ஆயிரத்தை கடந்தது appeared first on Dinakaran.

Tags : Palestinians ,Rabaa ,Gaza Ministry of Health ,Israel ,Hamas ,Dinakaran ,
× RELATED ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு மழை: 9 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி