×

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்: அரசு வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடந்த மாதம் 3ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை ரோந்து கப்பல்கள் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து 23 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களின் 2 விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதி, மீனவர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி இலங்கை நீதிமன்றம் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, அவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. மற்ற 3 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட 20 மீனவர்களை தங்களுடைய பராமரிப்பில் வைத்து நேற்று முன்தினம் மாலை கொழும்பில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். பாஜ வரவேற்புக்கு மறுப்பு: மீனவர்களை வரவேற்க பாஜ மீனவர் அணியை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். மற்ற 3 மீனவர்களையும் படகுகளையும் மீட்கும்படி கூறி பாஜவினரின் சால்வைகளை ஏற்க மறுத்து விட்டனர்.

The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்: அரசு வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Ramanathapuram district ,Rameswaram ,Sri Lankan Navy ,Neduntivu ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...