×

சொத்து வழிகாட்டி மதிப்பை மாற்றியமைத்த ஆணை ரத்து!!

சென்னை : சொத்து வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைத்து 2023-ல் அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்த உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சுற்றறிக்கையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு. சட்டவிதிகளை பின்பற்றி வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைக்கும் வரை 2017 ம் ஆண்டின் வழிகாட்டி மதிப்பை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சொத்து வழிகாட்டி மதிப்பை மாற்றியமைத்த அரசின் உத்தரவை எதிர்த்து கிரெடாய் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. கிரெடாய் அமைப்பின் வழக்கில் சுற்றறிக்கையை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது.

The post சொத்து வழிகாட்டி மதிப்பை மாற்றியமைத்த ஆணை ரத்து!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,High Court ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...