×

புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறிழைத்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்: நடிகை குஷ்பூ

சென்னை: சிறுமி விவகாரத்தில் தவறிழைத்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என குஷ்பூ தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி, பாலியல் பலாத்கார முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. 4 நாட்களாக சிறுமியை தேடிவந்த நிலையில் நேற்று அம்பேத்கர் நகர் பகுதி கால்வாயில் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்திய போலீசார், பலாத்கார முயற்சியில் இறந்தது தெரிய வந்தது. சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர், பலாத்கார முயற்சியில் ஈடுபட்டபோது உயிரிழந்துள்ளது. சிறுமி உயிரிழந்த சனிக்கிழமை அன்றே போலீசுக்கு பயந்து உடலை கால்வாயில் வீசியுள்ளனர்.

சிறுமி உயிரிழப்பு தொடர்பாக 2 பேரை பிடித்து புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். கருணாஸ், விவேகானந்தன் ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சிறுமி கொலை விவகாரத்தில் நீதி கேட்டு இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் குற்றவாளிகளுக்கு மிகுதியான தண்டனை வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். குற்றச்செயல் அதிகரிக்க போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்டவையே காரணம் எனவும் சிறுமி விவகாரத்தில் தவறிழைத்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. சிறுமி கொலைக்கு ஆட்சியாளர்களின் தவறே காரணம் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறிழைத்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்: நடிகை குஷ்பூ appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Kushboo ,Chennai ,Ambedkar Nagar Canal ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு