×

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும்: வானிலை மையம் தகவல்

சென்னை: இன்று(06.03.2024) முதல் வரும் 12ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இன்று(06.03.2024) முதல் 12ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: இன்று(06.03.2024) மற்றும் நாளை(07.03.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,CHENNAI ,Tamil Nadu ,Puduwai ,Karaikal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட்...