- ED
- சிபிஐ
- எஸ்பிஐ
- பாஜக
- I.N.D.I.A
- நாராயணசாமி
- முதல் அமைச்சர்
- புதுச்சேரி
- முன்னாள்
- ராகுல் காந்தி
- இந் திண்டுக்கல் கூட்டணி
- முன்னாள் முதல்வர்
- தின மலர்
புதுச்சேரி: I.N.D.I.A கூட்டணி மிகவும் வலிமையாக தேர்தலை எதிர்கொள்ளும் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். வணக்கம் தமிழ்நாடு நிகழ்ச்சிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ராகுல் காந்தியின் நியாய யாத்திரை பயணத்தில் மக்கள் எழுச்சி அடைந்துள்ளனர். பீகார், மேற்குவங்கத்தில் ராகுல் காந்திக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. மம்தா பானர்ஜியை தவிர பிற தலைவர்கள் ஒருமித்த கருத்துடன் I.N.D.I.A கூட்டணியில் பயணம் செய்கின்றனர். குஜராத், உத்திரப் பிரதேசத்தில் பாஜக அதிக கவனம் செலுத்துகிறது. மாநிலக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் நெருடல்கள் சரிசெய்யப்பட்டன; தமிழகத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை இறுதி செய்வதில் தான் இழுபறி என்று அவர் கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும். 300 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயார்; வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளரை களமிறக்கி வெற்றி காண்போம். I.N.D.I.A. கூட்டணி மிகவும் வலிமையாக தேர்தலை எதிர்கொள்ளும். பணம், அதிகார பலத்தை பயன்படுத்தி வெல்ல நினைக்கிறது பாஜக. அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை ஏவி எதிர்கட்சிகளை பாஜக அரசு மிரட்டுகிறது. தேர்தல் பத்திரம் தொடர்பான விவரத்தை வெளியிட தயக்கம் ஏன்?; தேர்தல் நன்கொடை பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்?; ED, CBI போல எஸ்பிஐ வங்கியும் பாஜகவின் அங்கமாக செயல்படுகிறது. அதிகார துஷ்பிரயோகம் செய்து தேர்தலை சந்திக்க நினைக்கிறது பாஜக. தமிழக மக்களை திசைதிருப்பவே மதுரை எய்ம்ஸ் கட்டடத்திற்கு அடிக்கல் என்று அவர் கூறியுள்ளார்.
The post ED, CBI போல SBI-யும் பாஜக-வின் அங்கமாகியுள்ளது.. I.N.D.I.A கூட்டணி மிகவும் வலிமையாக தேர்தலை எதிர்கொள்ளும்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி!! appeared first on Dinakaran.