செங்கல்பட்டு : செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரும் திருமால்பூர் விரைவு ரயில், கண்டெய்னர் லாரி மீது உரசியது. சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே கண்டெய்னர் லாரி மீது ரயில் உரசியதால் கேட் வேலை செய்யவில்லை. புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
The post புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் : பயணிகள் அவதி!! appeared first on Dinakaran.