கோவை : கோவை வடவள்ளி PSBB பள்ளிக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3,4,5-ம் வகுப்பு தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை வடவள்ளி பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் பள்ளியில் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டலால் எல்.கே.ஜி முதல் 11-ம் வகுப்பு வரை நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
The post கோவை வடவள்ளி பள்ளிக்கு இன்றும் விடுமுறை!! appeared first on Dinakaran.