×

நாகர்கோவில் அருகே கோயில் படையலில் வைக்கப்பட்ட மதுவில் விஷம் கலந்து கொலை செய்த வழக்கில் பூசாரி கைது..!!

குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோயில் படையலில் வைக்கப்பட்ட மதுவில் விஷம் கலந்து கொலை செய்த வழக்கில் பூசாரி கைது செய்யப்பட்டார். மதுவில் விஷம் கலந்த வடலிவிளையை சேர்ந்த சுடலை மாடசுவாமி கோயில் பூசாரி சதீஷ் (45) கைது செய்யப்பட்டிருக்கிறார். கோயிலில் சாமி ஆடும் அருள் என்பவரை கொல்ல பூசாரி சதீஷ் மதுவில் விஷம் வைத்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கோயிலில் சாமி ஆடும் அருளுக்கும், பூசாரிக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்தது. கோயில் நிர்வாகத்தில் கணக்கு கேட்பது மற்றும் அடிக்கடி மது போதையில் அருள் தகராறு செய்து வந்துள்ளார்.

பூசாரி விஷம் கலந்து கொடுத்த மதுவை தனது நண்பர் செல்வகுமாருடன் சேர்ந்து அருள் அருந்தியுள்ளார். இதையடுத்து செல்வகுமார் வீட்டுக்கு சென்றதும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் மது அருந்திய அருள், ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கில் மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் படையலில் வைக்கப்பட்ட மதுவில் விஷம் கலந்து கொலை செய்த வழக்கில் பூசாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நாகர்கோவில் அருகே கோயில் படையலில் வைக்கப்பட்ட மதுவில் விஷம் கலந்து கொலை செய்த வழக்கில் பூசாரி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Kumari ,Nagarko, Kumari district ,Mataswamy ,Temple ,priest ,Satish ,Vadalivala ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்