×

புதுச்சேரியில் கொடூரம்: பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமி கொலை: 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி, பாலியல் பலாத்கார முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. புதுச்சேரி, சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் ஆர்த்தி (9), 5ம் வகுப்பு மாணவி, கடந்த 2ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிந்து சிறுமியை பல இடங்களில் தேடி வந்தனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சிறுமி ஆர்த்தி சோலைநகரை விட்டு வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

தொடர்ந்து சோலைநகரில் வீடு, வீடாக போலீசார் சோதனை நடத்தினர். 4 நாட்களாக சிறுமியை தேடிவந்த நிலையில் நேற்று அம்பேத்கர் நகர் பகுதி கால்வாயில் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்திய போலீசார், பலாத்கார முயற்சியில் இறந்தது தெரிய வந்தது. சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர், பலாத்கார முயற்சியில் ஈடுபட்டபோது உயிரிழந்துள்ளது. சிறுமி உயிரிழந்த சனிக்கிழமை அன்றே போலீசுக்கு பயந்து உடலை கால்வாயில் வீசியுள்ளனர். சிறுமி உயிரிழப்பு தொடர்பாக 2 பேரை பிடித்து புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். கருணாஸ், விவேகானந்தன் ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தனியாக வசிக்கும் விவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்துச் சென்றுள்ளார். சனிக்கிழமை காலை 11 மணிக்கு சிறுமியை அழைத்துச் சென்றவர்கள், அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பலாத்காரம் செய்யும் முயற்சியில் சிறுமி உயிரிழந்ததை அடுத்து கை, கால்களை கட்டி சாக்கு பையில் போட்டு கால்வாயில் வீசியுள்ளனர். சிறுமி உயிரிழந்த நிலையில் பிற்பகல் 2.30 மணி அளவில் சாக்குப்பையில் போட்டு கால்வாயில் வீசியது தெரிய வந்துள்ளது. விவேகானந்தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள கால்வாயில் இருந்துதான் சிறுமி உடல் மீட்கப்பட்டது.

The post புதுச்சேரியில் கொடூரம்: பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமி கொலை: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Narayan ,Puducherry, Choli City ,Arthi ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு