×

முத்தையாபுரத்தில் பேருந்து கண்டக்டரை தாக்கிய இருவர் கைது

ஸ்பிக்நகர், மார்ச் 6: பழையகாயல் இருவப்பபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன்(55). தனியார் பேருந்தில் கண்டக்டராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். முத்தையாபுரம் அருகே வந்தபோது பஸ்சில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ரவி மகன் பொன் முத்துராமலிங்கம்(22), விருதுநகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஜீவா(31), ராமநாதபுரம் கல்லூர் காந்தி மகன் பழனி(34) உள்ளிட்டோர் கண்டக்டர் பார்த்திபனை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பார்த்திபன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட பொன் முத்துராமலிங்கம் மற்றும் ஜீவாவை கைது செய்தனர். பழனியை தேடி வருகின்றனர்.

The post முத்தையாபுரத்தில் பேருந்து கண்டக்டரை தாக்கிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Muthiyapuram ,Spignagar ,Parthipan ,Old Kayal Iruvappapuram ,Thoothukudi ,Tiruchendur ,Ramanathapuram District ,Kamuthi ,
× RELATED தூத்துக்குடியில் ஹேர்டை குடித்து ஆசிரியை தற்கொலை