×

வரும் மார்ச் 12ம் தேதி திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம்: தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை: சென்னை தியாகராய நகரில் வரும் மார்ச் 12ம் தேதி திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிட வேண்டிய நெறிமுறைகளை வகுத்திடும் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் வருகிற மார்ச் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை, தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஓட்டல் அகார்டில் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் – மாநிலங்களவைக்குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. தலைமையில், கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி. வரவேற்புரையாற்றிட, இளைஞர் அணிச் செயலாளர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிட இருக்கின்றார். அழைப்பிதழ் வரப் பெற்றவர்கள் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post வரும் மார்ச் 12ம் தேதி திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம்: தலைமைக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Speakers' ,Chennai ,DMK ,Thiagaraya Nagar, Chennai ,
× RELATED சிறந்த மதசார்பற்ற பிரதமரை...