×

ஹிஸ்புல்லா தாக்குதல்; கேரளா வாலிபர் பலி: 2 இந்தியர்கள் படுகாயம்

ஜெருசலேம்: இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா படை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியொட் மீது ஏவுகணை தாக்கியது. இதில் 3 இந்தியர்கள் படுகாயமடைந்ததில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாட் நிபின் மேக்ஸ்வெல் (31) என தெரிய வந்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பாட் நிபின் இஸ்ரேலுக்கு வந்து பண்ணை ஒன்றில் வேலை செய்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் 5 வயது மகள் உள்ளனர். இதற்கிடையில் காயமடைந்த இருவர் புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

The post ஹிஸ்புல்லா தாக்குதல்; கேரளா வாலிபர் பலி: 2 இந்தியர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Hezbollah ,attacks ,Kerala ,Jerusalem ,Israel ,Hamas ,Lebanon ,Margaliot ,Galilee ,Dinakaran ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...