- பேராவூர்
- திருவள்ளூர்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஏ கிருஷ்ணசாமி
- திருவள்ளூர் யூனியன்
- பேராத்தூர் ஊராட்சி
- நாட்டகோயில் திபாய்
- திருவள்ளூர்
- தின மலர்
திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் விடும் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி உடனுக்குடன் அதனை நிறைவேற்றி வருகிறார். அதன்படி திருவள்ளூர் ஒன்றியம், பேரத்தூர் ஊராட்சி நத்தகோயில் திப்பையிலிருந்து திருவள்ளூர் வரை பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் எம்எல்ஏவிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி பேரத்தூர் ஊராட்சி, நத்தகோயில் திப்பையிலிருந்து விஷ்ணுவாக்கம், கீழானூனூர், ஈக்காடு, திருவள்ளூர் வரை செல்லும் புதிய வழித்தடத்தில் பேருந்தை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்க விழா பேரத்தூர் ஊராட்சி நத்தகோயில் திப்பையில் நேற்று நடைபெற்றது. எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றியச் செயலாளர் ஜெயசீலன், ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி தரணி, ஊராட்சி தலைவர் முத்துமாரி தேவன், ஒன்றிய பொருளாளர் சீனிவாசன், துணைத் தலைவர் மோகன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சரவணன், உதயநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பேரத்தூரிலிருந்து திருவள்ளூர் வரை புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.