×

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,674 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 1,674 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூர் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 1 லட்சம் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 1,674 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

எம்எல்ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், துரை சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் ஆ.கற்பகம் (திருவள்ளூர்), க.தீபா (திருத்தணி), திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,674 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஆயிரம் பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கியுள்ளோம். மாவட்ட கலெக்டர் கூறியபடி நமது மாவட்டத்தில் 20 ஆயிரம் விலையில்லா பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
இந்த அரசு உங்களைத் தேடி வரும் அரசு.

மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத அடிப்படை வசதிகளுக்கு தீர்வு காணுகின்ற அரசு. இந்த அரசுதான் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. மீதி உள்ளவர்களுக்கும் விடுபடாமல் விலையில்லா பட்டாக்கள் விரைவில் வழங்கப்படும். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது எப்படி செயல்பட்டாரோ, அவரை விட நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். இவ்வாறு சேசினார்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் 1,674 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur district ,Minister R. Gandhi ,Tiruvallur ,Minister ,R.Gandhi ,Government Ambedkar Law College ,Bhattarai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...