×

ஸ்ரீபெரும்புதூரில் மழைநீர் கால்வாய் சேதம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் சேதமடைந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. புதிய சாலை அமைக்கப்பட்ட இடங்களில் சர்வீஸ் சாலைக்கு அருகிலேயே ஆங்காங்கே மழைநீர் மூடு கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், செல்லப்பெருமாள் நகரில் இருந்து நெமிலி செல்லும் சாலை சந்திப்பில் மழைநீர் கால்வாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டப்பட்டு, வாகன பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், கால்வாய் மீது போடப்பட்ட சிமென்ட் கான்கிரீட் தளம், திடீரென வட்ட வடிவில் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் அச்சத்துடனே கால்வாயை கடந்து சென்று வருகின்றனர்.  கால்வாய் சீரமைத்து ஓரிரு மாதங்களில் கால்வாய் உடைந்து சேதமானதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, கால்வாயை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஸ்ரீபெரும்புதூரில் மழைநீர் கால்வாய் சேதம் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Chennai-Bangalore National Highway ,Dinakaran ,
× RELATED சென்னையில் தபால் வாக்குப்பதிவு...