×

ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த 45 கிலோ கஞ்சா பறிமுதல் 2 வாலிபர்கள் கைது

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பிரபல தனியார் கல்லூரி அருகே நேற்று முன்தினம் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் சுற்றித் திரிவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், அந்த நபர்களை மடக்கிப் பிடித்து, அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர்.

அப்போது, அதில் சிறு சிறு பொட்டலகங்களாக சுமார் 45 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் திருவள்ளூரை சேர்ந்த பூஞ்சோலை (37) மற்றும் முகுந்தன் (24) என தெரிய வந்தது.

இவர்கள் ஆந்திர மாநிலம், இராஜமுந்திரியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, அதனை சிறுசிறு பொட்டலங்காக பிரித்து சென்னை புறநகர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இருவரும் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. நான்கரை லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

The post ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த 45 கிலோ கஞ்சா பறிமுதல் 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra ,Kunrathur ,Tambaram Prohibition Police ,Vandalur-Meenjoor Ring Road ,
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்