×

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!!

சென்னை: தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2008 பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் டி.நசீர். நசீருடன் தொடர்புடைய இளைஞர்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். சிறையில் இருந்த இளைஞர்களை லஷ்கர்-இ- தொய்பாவில் சேர தூண்டியதாக நசீர் கைது செய்யப்பட்டார்.

The post பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : NIA ,Tamil Nadu ,Bengaluru ,CHENNAI ,National Intelligence Agency ,D. Naseer ,2008 Bangalore blast ,Naseer ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...