×

ரயில் தண்டவாளத்தில் இறங்கி பயணிகள் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தினந்தோறும் தாமதமாக வருவதைக் கண்டித்து காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை 6.15 மணிக்கு வரவேண்டிய திருமால்பூர்- சென்னை கடற்கரை ரயில் ஒரு மணி நேரம் தாமதம் என புகார் தெரிவித்துள்ளனர். காலை 6.15 மணிக்கு வரவேண்டிய ரயில் 7.15 மணிக்கு வந்ததால் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்தினர்.

The post ரயில் தண்டவாளத்தில் இறங்கி பயணிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kancheepuram ,Chennai beach ,Thirumalpur-Chennai Beach ,
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...