×

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 120 மனுக்கள் பெறப்பட்டன

திருவாரூர், மார்ச் 5: திருவாரூரில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 120 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் சாருயிடம் வழங்கினர். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 120 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாரு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் வழக்கம் போல் தரைதளத்தில் மாற்றுதிறனாளிகளிடம் அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார். இதில் கூட்டுறவு இணைபதிவாளர் சித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலர் தமிழ்மணி, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 120 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Collector ,Saru ,Thiruvaroor ,People's Day ,Thiruvarur Collector's Office Partnership ,Dinakaran ,
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது