×

சரள்மண் கடத்திய லாரி பறிமுதல்

மானூர், மார்ச் 5: மானூர் காவல்நிலைய எஸ்.ஐ ரபீனாமரியம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கரன்கோவில் சாலையில் மேலப்பிள்ளையார்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் போலீசார் லாரியில் சோதனை நடத்திய போது அனுமதியின்றி சரள்மண் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

The post சரள்மண் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Semen ,Manur ,Manur Police Station S. I ,Rabinamiam ,Malapilaiyarkulam ,Sankarango ,Saralman ,Dinakaran ,
× RELATED மானூர் அருகே கல்லூரி மாணவி மாயம்