×

காணாமல்போன ரயில்வே ஊழியர் ஏரியிலிருந்து உயிருடன் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் வீரராகவன்(53). ரயில்வே ஊழியர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 28ம் தேதி திடீரென காணாமல்போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் கந்தன்கொல்லை வான்மதி நகர் அருகே உள்ள ஏரியில் ஒருவர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஒருவரின் சத்தம் கேட்டுள்ளது. அருகே சென்று பார்த்தபோது முள் செடியில் ஒருவர் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காணாமல்போன ரயில்வே ஊழியர் வீரராகவன் என தெரியவந்தது….

The post காணாமல்போன ரயில்வே ஊழியர் ஏரியிலிருந்து உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Veeraragavan ,Perumalpattu Venkateswara town ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...