×

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக தயார் : 8வது சம்மனை புறக்கணித்து ஈடிக்கு கெஜ்ரிவால் பதில்

புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த துணை முதல்வர், எம்பி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முறைகேட்டில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் தொடர்புள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றது. 7 முறையும் விசாரணக்காக கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. நேற்று 8வது சம்மனுக்காக கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். ஆனால் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராவாமல் 8வது நோட்சையும் புறக்கணித்தார். இதனிடையே வருகிற 12ம் தேதிக்கு பிறகு வீடியோகான்பரன்ஸ் மூலமாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக தயார் : 8வது சம்மனை புறக்கணித்து ஈடிக்கு கெஜ்ரிவால் பதில் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,ED ,New Delhi ,Enforcement Department ,Delhi government ,Deputy ,Chief Minister ,Aam Aadmi Party ,Dinakaran ,
× RELATED ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் கெஜ்ரிவால் மனைவி பிரசாரம்