×

விளையாட்டுத் துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்ட கழக அரசு என்றும் உறுதியுடன் செயலாற்றும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்ட கழக அரசு என்றும் உறுதியுடன் செயலாற்றும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X தள பதிவில் வெளியிட்டுள்ளதாவது; தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சாதனைகள் தொடர்ந்திடும் வகையில் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக, நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகக்குழுக் கூட்டத்தில் தலைமை செயலகத்தில் இன்று பங்கேற்றோம்.

அரசு தலைமைச் செயலாளர் – தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் – விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்துவது – ஒவ்வொரு பகுதியிலும், திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவிப்பது – விளையாட்டுத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவது என தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையில் முதன்மை மாநிலம் ஆக்கிடும் வகையிலான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. விளையாட்டுத் துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்ட கழக அரசு என்றும் உறுதியுடன் செயலாற்றும். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post விளையாட்டுத் துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்ட கழக அரசு என்றும் உறுதியுடன் செயலாற்றும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Union government ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Corporation Government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED யானை பசிக்கு சோளப் பொறி போல்...