×

நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் கேட்ட ஆவணங்களை வழங்க விஷாலுக்கு கால அவகாசம் அளித்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் கேட்ட ஆவணங்களை வழங்க விஷாலுக்கு கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனம், நடிகர் விஷால் இடையேயான கடன் விவகாரத்தில் ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா நியமிக்கப்பட்டிருந்தார். அன்புச்செழியனிடம் விஷால் வாங்கிய ரூ. 21.29 கோடி கடனை லைகா செலுத்தியிருந்தது. ஆடிட்டர் கேட்ட ஆவணங்களை வழங்க விஷாலுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வழக்கின் விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் கேட்ட ஆவணங்களை வழங்க விஷாலுக்கு கால அவகாசம் அளித்து ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Vishal ,Chennai ,Chennai High Court ,Srikrishna ,Lyca ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…