×

பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – தேசத்தின் அவமானம்: அமைச்சர் மனோ தங்கராஜ்!

சென்னை: பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – தேசத்தின் அவமானம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கணவருடன் பைக் டூர் வந்த பெண், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு இடத்தில் டெண்ட் அமைத்து தங்கி இருக்கின்றனர்.

அப்போது அங்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை தாக்கி பாலியல் வன்புணர்வு செய்து அந்த பெண்ணின் கணவரையும் தாக்கியுள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு பைக் டூர் வந்த தம்பதிகளுக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தலைகுனிய செய்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது X தள பதிவில், 66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா? இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும் கலாச்சார பெருமையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

The post பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – தேசத்தின் அவமானம்: அமைச்சர் மனோ தங்கராஜ்! appeared first on Dinakaran.

Tags : Minister Mano Thangaraj ,Chennai ,Minister ,Mano Thangaraj ,India ,
× RELATED மக்களவை தேர்தல் முடியும் வரை பிரதமர்...