×

பிரதமர் மோடி வருகையால் அண்ணாசாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

 

சென்னை, மார்ச் 4: சென்னையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அண்ணாசாலையில் இன்று பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்து, மாநகர போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘தாமரை மாநாடு’ பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார்.

பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களை சுற்றியுள்ள அண்ணாசாலை ஒய்எம்சிஏ நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக அண்ணாசாலை, எல்.வி.பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, தொழிற்பேட்டை சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட சாலைகள் விவரம் வருமாறு:

* மத்திய கைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை.

* இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு.

* மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை.

* அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை.

* விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி).

* அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை.

* தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை.

The post பிரதமர் மோடி வருகையால் அண்ணாசாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Annasalai ,Modi ,Chennai ,Dinakaran ,
× RELATED நீதிபதி குடியிருப்புக்குள் செல்ல...