×

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற புதுப்புது கதை சொல்லும் மோடி; அமைச்சர் சிவசங்கர் கிண்டல்

அரியலூர்: அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: இலவசமாக மக்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என மோடி சொல்கிறார். ஆனால் பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் இலவச திட்டங்களை செயல்படுத்துகின்றனர். தேர்தல் வர உள்ளதால் நம்மை ஏமாற்ற மோடி தமிழகத்திற்கு 10 நாளைக்கு ஒரு முறை வந்து புதுசு புதுசா கதை சொல்கிறார்.

கடந்த பத்தாண்டு ஆட்சியில் மோடி சொன்னதை எதையாவது செய்து உள்ளாரா? நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனத்தை தொழிலதிபர்களுக்கு விற்கும் ஏஜென்ட்டாக தான் மோடி செயல்படுகிறார். இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும். மோடி தலைமையிலான ஆட்சி வீழ வேண்டும் என்றார்.

The post தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற புதுப்புது கதை சொல்லும் மோடி; அமைச்சர் சிவசங்கர் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Minister ,Sivashankar ,Ariyalur ,DMK ,Anna statue ,Transport Minister ,BJP ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...