×

அலைகள் சீற்றத்தால் ஆபத்தான நிலை தரங்கம்பாடி கடலில் குளிக்க வேண்டாம் கருக்கலைப்பு செய்தது நிரூபிக்கப்பட்டால் மருத்துவ கவுன்சிலில் இருந்து பெயர் நீக்கப்படும்

நாகப்பட்டினம், மார்ச்3: கருவறையில் மாயமாகும் மகள்கள், தங்கமகள் உயிர்காக்கும் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: கருவறையில் மாயமாகும் மகள்கள் தங்கமகள் உயிர்காக்கும் திட்டத்தின் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெறுகிறது. பெண் கருக்கொலைக்கு காரணமாக இருக்கும் மருத்துவர்கள், ஸ்கேன் மையங்கள் மீது கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும். பெண் கருக்கொலை மற்றும் கருவின் பாலினம் கேட்பதும், அறிவிப்பதும் பாலினத்தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 பிரிவு 6.23(1) மற்றும் 25ன் படி தண்டனைக்குரியது ஆகும். கருவின் பாலினத்தை கர்ப்பிணி பெண்ணிடமோ, அவர்களது உறவினரிடமோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேறு ஏதேனும் முறையிலோ அறிவித்தல் பாலினத்தேர்வை தடை செய்தல் படி தண்டனைகள் விதிக்கப்படும்.

நீதிமன்றதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு முடியும் வரை மருத்துவக் கவுன்சிலில் இருந்து மருத்துவரின் பெயர் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். நீதிமன்றத்தில் குற்றம் முதன்முறை நிரூப்பிக்கப்பட்டால் 5 வருடத்திற்கு மருத்துவக் கவுன்சிலில் இருந்து மருத்துவரின் பெயர் பதிவு நீக்கப்படும்.
மீண்டும் அதே மருத்துவர் மீது இரண்டாவது முறை குற்றம் நிரூப்பிக்கப்பட்டால் மருத்துவக் கவுன்சிலில் இருந்து மருத்துவரின் பெயர் பதிவு நிரந்திரமாக நீக்கப்படும்.

மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். மருந்தகங்களில் மகப்பேறு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கரு கலைப்பு செய்ய எந்த ஒரு மருந்து மாத்திரைகளை வழங்கக்கூடாது. மீறினால் மருந்தகத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என்றார். இணை இயக்குநர் ஜோஸ்பின்அமுதா, மாவட்ட சமூகநல அலுவலர் திவ்வியபிரபா, தேசிய சுகாதார திட்ட மாவட்ட ஒருகங்கிணைப்பாளர் ராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் எழிலரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post அலைகள் சீற்றத்தால் ஆபத்தான நிலை தரங்கம்பாடி கடலில் குளிக்க வேண்டாம் கருக்கலைப்பு செய்தது நிரூபிக்கப்பட்டால் மருத்துவ கவுன்சிலில் இருந்து பெயர் நீக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Council ,Nagapattinam ,Collector ,John Damvarghese ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் 25 எக்டேரில் கோடைகால சாகுபடி செய்ய இலக்கு