×

கூடங்குளம் அணுமின் நிலைய தேர்வு ஒத்திவைப்பு

கூடங்குளம்: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சி மற்றும் டி பிரிவு பணிகள் அணுமின் நிலையத்திற்கு இடம்கொடுத்தவர்களுக்கு வழங்கப்படும் என்று என்றுஒப்பந்தம் போடப்பட்டது.

இந்நிலையில் 117 ‘குரூப் சி’ மற்றும் 62 ‘குரூப் பி’ பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று (3ம் தேதி) நடத்தப்படுவதாக இருந்தது. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு, இந்திய அணுசக்தி துறை செயலாளருக்கு அவசர கடிதம் எழுதியிருந்தார். மேலும் தேர்வு நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அந்த பகுதி மக்கள் அறிவித்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இன்று நடைபெற இருந்த தேர்வை ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

The post கூடங்குளம் அணுமின் நிலைய தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Kudankulam ,Nellie district ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த...