×

மீனவரை கத்தியால் குத்தியவர் கைது

தூத்துக்குடி, மார்ச் 3: தூத்துக்குடி வடக்கு டி சுனாமி காலனியில் முன்விரோதத்தில் மீனவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி சிலுவைப்பட்டி, வடக்கு டி சுனாமி காலனியை சேர்ந்த தினால்ட் மகன் லோபஸ் (39). மீனவரான இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த ஆடுகள் கடந்த பிப். 29ம்தேதி வெளியே சென்றன. இதையடுத்து ஆடுகளை பிடிக்கச் சென்ற லோபஸ் மனைவி, அப்பகுதியில் இருந்த அருள்ராஜ் என்பவரின் தம்பி மற்றும் அவரது நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கும் லோபஸ் மனைவிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற லோபஸ் அருள்ராஜின் தம்பியை தாக்கியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சிலுவைப்பட்டி வடக்கு டிசுனாமி காலனி காலனியை சேர்ந்த ரஞ்சித்குமார் மகன் அருள்ராஜ் (19) லோபஸை கத்தியால் தாக்கியதோடு குத்தினார். இதில் தோள்பட்டை, நெஞ்சு பகுதிகளில் காயம் ஏற்பட்ட லோபஸ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து லோபஸ் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த தாளமுத்துநகர் எஸ்ஐ ராஜாமணி மற்றும் போலீசார் அருள்ராஜை கைது செய்தனர்.

The post மீனவரை கத்தியால் குத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tuticorin North D Tsunami Colony ,Dinald son ,Lopez ,Siluwaipatti, North D Tsunami Colony, Tuticorin ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...