×

மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம்-சென்னை கடற்கரை உள்ள வழித்தடங்களில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துகழகம் அறிவிப்பு

சென்னை: மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம்-சென்னை கடற்கரை உள்ள வழித்தடங்களில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கபடும் என்று போக்குவரத்துகழகம் அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கபடுகிறது. நாளை காலை 10-பிற்பகல் 3.30 மணி வரை தாம்பரம் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கபடும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

The post மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம்-சென்னை கடற்கரை உள்ள வழித்தடங்களில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துகழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram-Chennai Coast route ,Transport Corporation ,CHENNAI ,Southern Railway ,Tambaram-Chennai ,Dinakaran ,
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...