×

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் கேட்டுள்ளோம் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – மனிதநேய மக்கள் கட்சி இடையே பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மமக செயல்படும் எனவும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

The post மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Humanity People's Party ,DMK ,Lok Sabha elections ,Jawahirullah ,Chennai ,Lok Sabha ,Anna Vidyalayam ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்...