×

தென்னை மரம், பயிர் தீ வைத்து எரிப்பு

தர்மபுரி, மார்ச் 2: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (68). இவருக்கு காரிமங்கலம் பொம்மள்ளியில் விவசாய நிலம் உள்ள நிலையில், அதில் தென்னை மரங்கள் வளர்த்து வருகிறார். மேலும் அங்கு தீவன பயிர் பயிரிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று திடீரென அவரது தோட்டத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தர்மபுரி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் 20 தென்னை மரங்கள் மற்றும் தீவன பயிர்கள் எரிந்து நாசமானது. இது குறித்து சுகுமார் அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியை சேர்ந்த குமார் (30) என்பவர், தீவனப்பயிருக்கு தீ வைத்ததும், அதில் கொளுந்து விட்டு எரிந்ததால் அருகில் இருந்து தென்னை மரங்களும் எரிந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தென்னை மரம், பயிர் தீ வைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Sukumar ,Kaveripatnam, Krishnagiri district ,Karimangalam Pommalli ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...