×

லாரியில் மோதி பிளம்பர் பலி

திருமங்கலம், மார்ச் 2: உசிலம்பட்டி பசும்பொன்நகரை சோந்தவர் பாண்டி(55). பிளம்பர். இவரது மகன் பிரவீன். இவர்கள் இருவரும் சிந்துபட்டி அருகே கரையாம்பட்டி கிராமத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டனர். நேற்று மதிய உணவு வாங்கிக்கொண்டு பாண்டி டூவீலரில் சென்றார். சிந்துபட்டி – உசிலம்பட்டி ரோட்டில் பஞ்சராகி நின்ற சிமென்ட் லாரி மீது அவரது டூவீலர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமகா பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post லாரியில் மோதி பிளம்பர் பலி appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Sondavar Pandy ,Pasumponnagarai Usilampatti ,Praveen ,Kariyampatti ,Sindhupatti ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...