×

“ஆதிக்கத்தை எதிர்க்கும் திராவிட இயக்கத்தின் நிகழ்கால நம்பிக்கை” : அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

சென்னை : எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும், எதிரியின் கால்பிடிக்கும் கோழைகளுக்கும் அச்சம்தரும் ஜனநாயகப் போர்க்குரல் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “ஆதிக்கத்தை எதிர்க்கும் திராவிட இயக்கத்தின் நிகழ்கால நம்பிக்கை.பெரியார் – அண்ணா – கலைஞர் அவர்களின் சிந்தனை, செயல், ஆற்றல் ஆகியவற்றின் கலவையாய் தமிழ்நாட்டின் உரிமைக் காக்கும் மகத்தான தலைவர்.

எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும், எதிரியின் கால்பிடிக்கும் கோழைகளுக்கும் அச்சம்தரும் ஜனநாயகப் போர்க்குரல்.வாக்களித்தோர்க்கும், வாக்களிக்கத் தவறியோர்க்கும் அரசின் திட்டங்கள் மூலம் சமமாய் ஒளிவீசும் திராவிடச் சூரியன்,நம் கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தோம். இனமானம் காப்போம், உரிமைகளை வெல்வோம், துவள மாட்டோம் – வீழ மாட்டோம் என நம் முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்,”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post “ஆதிக்கத்தை எதிர்க்கும் திராவிட இயக்கத்தின் நிகழ்கால நம்பிக்கை” : அமைச்சர் உதயநிதி வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Dravidian Movement ,Minister ,Udayanidhi ,Chennai ,Udayanidhi Stalin ,Dravidian movement against ,Periyar - Anna ,Dinakaran ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...