×

ஜெயங்கொண்டத்தில் “இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்” திண்ணை பிரசார துண்டு பிரசுரம்

 

ஜெயங்கொண்டம், மார்ச் 1: ஜெயங்கொண்டம் பகுதியில் “இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்’’ திண்ணை பிரசாரம் துண்டு பிரசுரத்தை திமுகவினர் வீடுதோறும் விநியோகம் செய்தனர். ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலிபடி ஜெயங்கொண்டம் 8 வது வார்டில் “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” எனும் தலைப்பில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் திண்ணை பிரசாரம் செய்து துண்டு பிரசுரங்களை நகர திமுக செயலாளர் வெ.கொ.கருணாநிதி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் முரசொலிகுமார், வட்ட செயலாளர் விஜயன், முன்னாள் வட்ட செயலாளர் ராமசாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் கரிகாலன், வட்ட பொருளாளர் வீரவாசு, ஆனந்குமார், துணை செயலாளர் ராஜா, சேகர், ஜபர், கமாலுதீன்,கார்த்தி அசோக், ராஜீ, அண்ணாதுரை மற்றும் கிளை செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post ஜெயங்கொண்டத்தில் “இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்” திண்ணை பிரசார துண்டு பிரசுரம் appeared first on Dinakaran.

Tags : Jayangkonda ,Jayangkondam ,DMK ,Jayangkondam City DMK ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,District Secretary ,Tamil Nadu Government Transport Department ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் சாலையோர புளிய மரத்தில் திடீர் தீ