×

அறிவியல் வினாடி வினா போட்டி: பனையூர் பள்ளி முதலிடம்

குளத்தூர், மார்ச் 1: தூத்துக்குடியில் நடந்த அறிவியல் வினாடி வினா போட்டியில் பனையூர் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். தேசிய அறிவியல் தினத்தையொட்டி தூத்துக்குடி கல்லூரியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே அறிவியல் வினாடி, வினா போட்டி நடைபெற்றது. தூத்தூக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். 5 குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் குளத்தூரை அடுத்த பனையூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர்கள் அபிஷேக், மாரிகனிஷியா ஆகியோர் 5 சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து முதல் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்கள் பரமேஸ்வரி, அற்புதசகாயராஜா, திலகச்செல்வி ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை மரியஅனிதா, ஊர் நிர்வாகத்தினர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

The post அறிவியல் வினாடி வினா போட்டி: பனையூர் பள்ளி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Panayur School ,Kulathur ,Panaiyur School ,Tuticorin ,National Science Day ,Thoothukudi College ,Thoothukudi ,Panayur ,Dinakaran ,
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா