×

அரூர் பள்ளிகளில் பிளஸ்2 பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தீவிரம்

அரூர், மார்ச் 1: தமிழகத்தில் இன்று முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அரூர் ஆண்கள் பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 25 மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இங்கு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 550 முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, தேர்வறைகளில் மாணவர்களின் பதிவெண்களை ஒட்டுதல், எழுதுதல் உள்ளிட்ட பணிகளில், முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். நேற்று அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில், பதிவெண்கள் எழுதும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

The post அரூர் பள்ளிகளில் பிளஸ்2 பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Arur ,Aroor ,Tamil Nadu ,Arur Boys School ,Girls Higher Secondary School ,Theerthamalai ,Naripalli ,Morapur ,Paprirettipatti government ,Paprirettipatti ,
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி