அரூர், மார்ச் 1:அரூர் அடுத்த தீர்த்தமலையை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (27) என்பவருக்கும் கடந்தாண்டு, ஆகஸ்ட் 4ம் தேதி கருங்கல்பாடி முருகன் கோயிலில் திருமணம் நடந்தது. தற்போது, சிறுமி, 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மகளிர் நல அலுவலராக பணிபுரியும் மல்லிகா (59) என்பவர் அளித்த புகாரின் பேரில், அரூர் அனைத்து மகளிர் போலீசார் வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
The post சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.