×

2 எருமை மாடுகள் அடுத்தடுத்து சாவு

அரூர், மார்ச் 1: அரூர் அடுத்த எட்டிப்பட்டியை சேர்ந்தவர் சென்னமூர்த்தி (47), விவசாயி. இவர், 5 எருமை மாடுகள் மற்றும் 2 கன்றுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம், மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை முடித்துவிட்டு நேற்று அதிகாலை, வீட்டிற்கு வந்தார். அப்போது, ஒரு கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. இந்நிலையில் அங்கிருந்த தொட்டியில் தண்ணீர் குடித்த, 2 எருமை மாடுகள், அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது குறித்து அரூர் போலீசில் சென்னமூர்த்தி புகாரளித்தார். அதில் தனது எருமை மாடுகள் இறந்ததற்கு, அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post 2 எருமை மாடுகள் அடுத்தடுத்து சாவு appeared first on Dinakaran.

Tags : Aroor ,Chennamurthy ,Ettipatty ,Bengaluru ,Dinakaran ,
× RELATED 125 மூட்டை மஞ்சள் ₹12.5 லட்சத்திற்கு ஏலம்