×

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது

 

திருவாடானை, மார்ச் 1: பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருவாடானை அருகே 13 வயது சிறுமி 8ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு நடந்து செல்லும்போது கடந்த சில தினங்களாக ராஜலிங்கம்(24) என்பவர் சிறுமியை வழிமறித்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

மேலும் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுமி, திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ராஜலிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : POCSO ,Thiruvadanai ,Bokso ,Rajalingam ,
× RELATED 3 வயது குழந்தையிடம் செக்யூரிட்டி சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் கைது