×

5765 கீழடி அகழாய்வு பொருட்களை ஒன்றிய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தொல்லியல்துறையிடம் உள்ள கீழடியின் 5,765 அகழாய்வு பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட பின் அகழாய்வு பொருட்களை ஒப்படைக்க ஆணையிட்டுள்ளது. கீழடி அகழாய்வு பணிகளை கண்காணிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் நியமிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 2ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கக் கோரிய வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post 5765 கீழடி அகழாய்வு பொருட்களை ஒன்றிய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : 5765 Union Govt ,Tamil Nadu Govt ,ICourt ,Madurai ,Court ,Union government ,Geezadi ,Department of Archaeology ,Tamil Nadu government ,Amarnath Ramakrishna ,5765 Union Government ,ICourt Branch ,Dinakaran ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...