×

பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி மனு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி மனுவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. திமுகவின் தொகுதி பங்கீடு ஒரு சில தினங்களில் முடிவுறும் நிலையில் மதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் கடந்த 1996ம் ஆண்டு முதல் சட்டமன்ற மக்களவை உள்ளாட்சி தேர்தல்களில் மதிமுக போட்டியிட்டிருப்பதாகவும். இந்த தேர்தலில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டி காட்டினார்.

கடந்த 2006 ம் ஆண்டு நடத்த சட்டமன்ற தேர்தலில் 5.99 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில் 5.98 சதவீத வாக்களிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறி தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பின்னர் கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை என்பதனால் வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கோரவில்லை என்பதனாலும் மக்களவை தேர்தலில் அறிவிக்க எந்த நேரத்திலும் வெளியாகும் என்பதாலும் தங்கள் மனுவை பரிசீலித்து பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வைகோ கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் மதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்று முறையிட்டார்.

அந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் நாளை வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர். இந்த வழக்கை பொறுத்தவரையில் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்கக்கூடிய நீதிபதிகள் இது குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். ஏற்கனவே தாமாகாவிற்கு உத்தரவு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. தேர்தலுக்கு முன்பே அவர்களுடைய மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் மனுவின் அடிப்படையில் முடிவெடுப்போம் என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையிலேயே இந்த வழக்கையும் இது போல ஒரு உத்தரவு பிறப்பிப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி மனு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bambaram ,Madimuga ,ICourt ,Chennai ,Chennai High Court ,Wiko Chennai ,Dimuka ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...