×

ஜனவரி 24ம் தேதி முதலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தனால் நகர கூட முடியவில்லை : தமிழக அரசு

சென்னை : “ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை?” என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜனவரி 24ஆம் தேதி முதலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தனால் நகர கூட முடியவில்லை என்று தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து, இன்று பிற்பகலுக்குள் சாந்தனின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஜனவரி 24ம் தேதி முதலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தனால் நகர கூட முடியவில்லை : தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Shanthan ,Tamil Nadu government ,Chennai ,central government ,Chandan ,Sri Lanka ,CHENNAI HIGH COURT ,TAMIL GOVERNMENT ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்