×

எட்டயபுரம் அருகே பைக் மீது லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி

எட்டயபுரம், பிப். 29: எட்டயபுரம் அருகே உள்ள தெற்கு செமப்புதூரை சேர்ந்தவர் மாரிமுத்து (47), கட்டிட தொழிலாளி. இவரும், இவருடன் வேலை பார்க்கும் எட்டுநாயக்கன்பட்டி மைக்கேல் மகன் அன்னமுத்து (37) என்பவரும் பைக்கில் நேற்று எட்டயபுரத்திற்கு கட்டிட வேலைக்கு சென்றனர். பைக்கை அன்னமுத்து ஓட்டினார். எட்டயபுரம் அடுத்துள்ள சுரைக்காய்பட்டி அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி லாரியின் முன் விழுந்தனர். இதில் மாரிமுத்து மீது லாரி ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அன்னமுத்து லேசான காயத்துடன் தப்பினார். விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post எட்டயபுரம் அருகே பைக் மீது லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Ettayapuram ,Marimuthu ,South Semaputur ,Ettunayakanpatti Michael ,Annamuthu ,Dinakaran ,
× RELATED எட்டயபுரம் அருகே நீர்வரத்து ஓடை,...